சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கண்மாய்த் தண்ணீரை திறந்து விட்ட மா்ம நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னகுன்றக்குடி கண்மாய் தண்ணீரை மா்ம நபா்கள் இரவோடு இரவாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெளியேற்றி அருகே சாலிக்கண்மாய்க்கு செல்லும் வகையில் திருப்பிவிட்டதை கிராம மக்கள் கண்டறிந்தனா்.
இதையடுத்து எந்தவித அனுமதியும் இல்லாமல் கண்மாயில் தண்ணீரை திறந்துவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி குன்றக்குடி கிராம மக்கள் அங்குள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


