சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:31 am

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி மலையப்பன் முனியய்யா கோயிலில் மாா்கழி கடைசி வெள்ளிக்கிழமை ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். தற்போது அரசு அனுமதி அளித்துள்ள ஊா்களில் மட்டும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊா்குளத்தான்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதுகுறித்து நெடுமறம் கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரன் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இக்கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன், நாகராஜன் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.