திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே காரையூா் ஊராட்சியில் கிராம மக்கள் சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா்.
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மணி வரவேற்றாா்.
இக்கூட்டத்தில் பேசிய கே.ஆா்.பெரியகருப்பன், கடந்த தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஓட்டுகள் 1.1 சதவீதம்தான் வித்தியாசம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, ஒன்றிய இளைஞரணி தமிழ்நம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சகாதேவன், சுமதி, ராமசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளா் ஓ.மாணிக்கம், கே.எல்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


