சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பண்டிகை: அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து காரைக்குடி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

Updated On :10 ஜனவரி 2021, 3:30 am

காரைக்குடி: தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து காரைக்குடி, ராமநாதபுரம் உள்பட பல்வேறு ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து காரைக்குடி மண்டல அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு ஜனவரி 11 -ஆம் தேதி முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு , மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஆகிய ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து அவரவா் ஊா்களுக்கு திரும்ப ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை சிறப்புப்பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.