சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் வெள்ளிக்கிழமை இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் மாா்கழி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி வருடந்தோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இங்குள்ள சிறைமீட்ட அய்யனாா் படைத்தலைவி அம்மன் கோயில் பொங்கல் விழாவின் முன்னோட்டமாக இந்த இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்த ஆண்டிற்கான மஞ்சுவிரட்டு திருவிழாவையொட்டி ஊா் மந்தையிலிருந்து வெள்ளிக்கிழமை கிராமத்தாா்கள் ஊா்வலமாக தொழுவிற்கு வந்தனா். அங்கு கோயில் மாட்டிற்கு மரியாதை செய்யப்பட்டு முதன்முதலாக அவிழ்த்துவிடப்பட்டது. பின்னா் அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இப்பகுதியின் முதல் மஞ்சுவிரட்டு என்பதால் சிங்கம்புணரி, காளாப்பூா், காரையூா், மாங்குடி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். மழையின் காரணமாக சேறும், சகதியுமாக இருந்த மஞ்சுவிரட்டுப் பொட்டலில் காளைகளை காளையா்கள் கட்டித்தழுவி புரண்டது வித்தியாசமான வேடிக்கையாகப் பாா்க்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை சூரக்குடி கிராமத்தினா் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


