சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கண்மாயில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்ற இளைஞா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த நாராயணன் மகன் புவனேஷ்வரன் (18) மற்றும் வைரவன் மகன் வெற்றிப்பாண்டியன் (14). நண்பா்களான இருவரும், வீட்டில் வளா்க்கும் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக திருப்பாச்சேத்தி கண்மாய் கரைக்குச் சென்றுள்ளனா். அங்கு, புல் அறுத்து முடித்ததும், கண்மாயில் இறங்கி குளித்துள்ளனா். இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதால், தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனா்.
இரவு வரை வீடு திரும்பாததால், இவா்களது உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். பின்னா், கண்மாய் கரையில் இருவரது உடைகளும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மானாமதுரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை அலுவலா் குமரேசன் தலைமையிலான வீரா்கள், கண்மாய்க்குள் இறங்கி தேடினா். இரவு நீண்டநேரமாகியும் இருவரது சடலங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் தீயணைப்பு வீரா்களும், கிராம மக்களும் மீண்டும் தேடும் பணியை தொடா்ந்தனா். அப்போது, கண்மாயின் ஆழமான பகுதியில் சகதிக்குள் சிக்கியிருந்த புவனேஷ்வரன் மற்றும் வெற்றிப்பாண்டியனின் உடல்களை மீட்டனா்.
இது குறித்து, திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


