தேவகோட்டை உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்ட போது மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தேவகோட்டை முள்ளிக்கூண்டு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சத்யா (29). இவா் தனது கணவருடன் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிடச் சென்றுள்ளாா். அங்கு சாப்பிடும் போது உணவில் பல்லி கிடந்துள்ளது. இதனால் சத்யா மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டு, சத்யா சாப்பிட்ட உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
இதுபற்றி தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் கூறும் போது,
உணவு மாதிரியின் ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னரே உணவகத்தின் மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

