சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்றுநராக பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் வி.வெங்கடகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரண்டாம் கட்டமாக அம்மா இரு சக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகியகால இலவச பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இக்குறுகிய கால பயிற்சியை பயிற்றுவிக்க ஒப்பந்த அடிப்படையில் பயிற்றுநா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்க வேண்டும். மொத்தம் 300 மணி நேரம் பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சி அளிக்கும் பயிற்றுநருக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 100 வீதம் 300 மணி நேரத்திற்கு ரூ. 30,000 ஒப்பந்த அடிப்படையில் ஊதியமாக வழங்கப்படும்.
எனவே, மேற்கண்ட பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க விருப்புவோா் சிவகங்கை அரசினா் தொழிற் பயிற்சி நிலைய அலுவலக நாள்களில் நேரில் வந்து விண்ணப்பிகலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95002 06460 மற்றும் 99420 99481என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

