சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்  இன்று சிவகங்கை வருகை

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் பதவியேற்ற பின்னர் மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 22) வருகை தருகிறார்.  புதுதில்லியிலிருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலமாக புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை

Updated On :22 ஜூன் 2013, 5:51 am

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் பதவியேற்ற பின்னர் மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 22) வருகை தருகிறார்.  புதுதில்லியிலிருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலமாக புறப்பட்டு மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். 3 மணிக்கு மதுரை லேக் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களைச் சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு சிவகங்கை மாவட்டம் அம்மாச்சிப்பட்டி, அலவாக்கோட்டை பகுதிக்கும், மாலை 5 மணிக்கு சிவகங்கையில் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் சந்திப்பும், மாலை 6.30 மணிக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள சிலம்பு விரைவு ரயில் துவக்க விழாவிலும் அமைச்சர் பங்கேற்ற பின் மதுரை சென்று இரவு தங்குகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கார் மூலம் கோயம்புத்தூருக்குச் செல்கிறார். இத்தகவலை அமைச்சரின் தனி செயலர் எஸ்.ஒய். பழனியப்பன் தெரிவித்துள்ளார்.