சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

துள்ளிச் செல்வோம் பள்ளி...

 குருத்தாய் வளரும் பிள்ளைகளுக்கு கருத்தாய் பாடம்கூறும் பள்ளி

Updated On :21 ஜூன் 2013, 8:17 pm

 குருத்தாய் வளரும் பிள்ளைகளுக்கு
 கருத்தாய் பாடம்கூறும் பள்ளி
 இருட்டில் வாடும் ஏழைக்குழந்தைகள்
 ஏற்றம்அடைய ஏணியாம் பள்ளி
 
 ஒழுக்கம் என்றும் உயர்வு தருமெனும்
 உயர்மொழி நாளும் ஓதும் பள்ளி
 எழுகதிர் வெளிச்சம் பரவுதல் போல
 அறிவில் ஒளியைப் பாய்ச்சும் பள்ளி
 
 தமிழ்த்தாய் வாழ்த்தை அமிழ்தாய்க் கூறி
 தாய்மொழிச் சிறப்பை உணர்த்தும் பள்ளி
 இமையாய் இந்திய நாட்டைக் காக்க
 எழுச்சிக் கீதம் இசைக்கும் பள்ளி
 
 தள்ளியே நின்று கல்வியை மறந்தால்
 தன்நிழல் கூட தனியே விலகும்
 துள்ளியே நீயும் பள்ளி சென்றால்
 உன்கை அருகே உலகம் சுழலும்!