சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குறள் பாட்டு

மணியின் ஒளிபோல் தெளிவாகநீர் நிலைகள் வேண்டுமே

Updated On :21 ஜூன் 2013, 8:25 pm

அரண்
 

மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்
                                                          -திருக்குறள்
 மணியின் ஒளிபோல் தெளிவாக
 நீர் நிலைகள் வேண்டுமே
 ஆறுகள் ஏரிகள், கிணறுகள்
 வற்றாத வளங்கள் வேண்டுமே.
 
 பரந்து விரிந்த மண்வளமும்
 அருகி பாயும் மலைகளும்
 பசுமை தரும் காடுகளும்
 நாட்டுக்கு அழகு ஆகுமே
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்