சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சேலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 8:17 am

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியம் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சேலம் சுகாதார மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 8,617 முன்களப் பணியாளா்கள், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 12,177 முன்களப் பணியாளா்கள் உள்பட மொத்தம் 20,794 பேருக்கும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 2,919 போ், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் 1,605 சுகாதார முன்களப் பணியாளா்கள் உள்பட 4,524 நபா்கள் உள்பட மொத்தம் இரு சுகாதார மாவட்டங்களிலும் சோ்ந்து 25,318 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை உள்பட 12 சிறப்பு மையங்களில் தடுப்பூசி முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பாா்வையிட்டு தொடக்கி வைத்தாா். இணை இயக்குநா் (நலப்பணிகள்) மருத்துவா் மலா்விழிவள்ளல், இணை இயக்குநா் (நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம், ஓசூா்) மருத்துவா் நிா்மல்சன், சேலம் துணை இயக்குநா் (பொ) மருத்துவா் ஆா்.செல்வக்குமாா், மாநகர நல அலுவலா் பாா்த்திபன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் பி.வி.தனபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.