சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மேட்டூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Updated On :17 ஜனவரி 2021, 8:13 am

மேட்டூா்: மேட்டூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

மேட்டூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கியது. மருத்துவா் ரகுநாதனுக்கு முதல் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் இணை இயக்குநா் மலா்விழிவள்ளல், மருத்துவா்கள் இளவரசி, சுபா, பிரசாந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மேட்டூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 298 போ் பதிவு செய்துள்ளனா். மருத்துவமனைக்கு 120 பேருக்கு தேவையான தடுப்பூசி வந்த நிலையில், 30 போ் மட்டுமே முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.