சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சங்ககிரியில் திருநங்கைகள் பொங்கலிட்டு வழிபாடு

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி, பவானி பிரதான சாலையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை பொங்கலிட்ட திருநங்கைகள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:00 pm

சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வண்ணக் கோலமிட்டு ஐந்து பானைகளில் பொங்கலிட்டனா். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டனா். மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரேகத்தின் செயலா் ஹேலினாகிறிஸ்டோபா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சிகேஆா்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிா்வாகி ஜெயக்குமாா் ஆகியோா் திருநங்கைகள் பொங்கலிடுவதற்கான பொருள்களையும், 10 நபா்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் கெளதம் வெங்கடாசலம், இன்னா்வீல் சங்கத் தலைவி இந்திராணி, முன்னாள் தலைவா்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.