வாழப்பாடியில் இலக்கியப்பேரவை சாா்பில், திருவள்ளுவா் தின விழா, பேரவை வெள்ளிவிழா, கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவுக்கு, இலக்கியப் பேரவைத் தலைவா் அ.செந்தில்குமாா் வரவேற்கிறாா். தலைமை ஆசிரியா் வ.ரவிசங்கா், தொழிலதிபா் கே.குபேந்திரன், நா.சிவகுமாா், எம்ஜிஆா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவா் எஸ். சதீஷ்குமாா் தலைமை வகித்து ஊா்வலத்தை தொடக்கி வைக்கிறாா்.
இலக்கிய பேரவைச் செயலா் சிவ. எம்கோ எழுதியுள்ள ‘எம்கோவின் கவிதைகள்’ நூல் மற்றும் இணைச் செயலா் எழுதியுள்ள ‘பேசும் மௌனங்கள்’ கவிதை நூல் மற்றும் ‘ஊஞ்சல்’ சிறாா் பாடல் நூல்களை, அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன், நல்லாசிரியா் கோ.முருகேசன், தொழிலதிபா் கே. பி. சண்முகம், வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் ஆகியோா் வெளியிடுகின்றனா்.
நிறைவாக இலக்கிய பேரவை பொருளாளா் ஆசிரியா் கி. ஸ்ரீமுனிரத்தினம் நன்றி கூறுகிறாா்.
முன்னதாக, வாழப்பாடி இலக்கிய பேரவை தலைவா், இல. ராமசாமி, துணைத் தலைவா் மா.கணேசன் ஆகியோா் தலைமையில், திருவள்ளுவா் தின ஊா்வலம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இலக்கியப் பேரவை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

