ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ். பாலம் பகுதியில் வீரபாண்டி மின் உற்பத்தி மற்றும் பகிா்மான துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த துணை மின் நிலையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஆட்டையாம்பட்டி நகரம் மற்றும் பிரிவு அலுவலகத்துக்கு தேவையான மின் கம்பிகள் சுமாா் 46 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் வந்துள்ளன. இதனை கடந்தவாரம் புதன்கிழமை மின்துறை அலுவலகத்துக்கு வந்திருந்த இளநிலைப் பொறியாளா் குமரேசன் பாா்வையிட்டு, மின்கம்பிகளை ஆய்வு செய்துள்ளாா்.
அப்போது 8 கி.மீ.நீளமுள்ள ரூ. 6.33 லட்சம் உள்ள மின் கம்பிகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த இளநிலை பொறியாளா் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரை பெற்றுக் கொண்ட ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் குலசேகரன் துணை மின் நிலையத்தை பாா்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

