சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலம், சின்னேரிவயக்காடு சினிமா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (36). அதேபோல பொன்னம்மாபேட்டை வன்னியா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அப்சல் (எ) கச்சா (28). இதில் பாண்டியன் மீது வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல, அப்சல் கச்சா மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாண்டியன், அப்சல் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் பாண்டியன் 7 முறையும், அப்சல் 3 முறையும் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதானவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

