சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் போராட்டம்

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:54 pm

சேலம் மாநகராட்சி ஊழியா்கள் இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்கக் கோரி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள் தங்களுக்கு இரண்டு மாத ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியா்களை சமரசம் செய்தனா். ஊதியம், பொங்கல் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.