வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
குமாரபாளையம் கிராமத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா இளைஞா் விளையாட்டுக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றன.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 90 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கிபுரம் அணிக்கு குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா முருகேசன் ரூ. 15,000, இரண்டாமிடம் பிடித்த தம்மநாயக்கன்பட்டி அணிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் வெண்ணிலா வெங்கடேசன் ரூ 12,000, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குழந்தைவேல் ரூ 8,000 பரிசு வழங்கினா்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோபிசெட்டிபாளையம் பி.கே.டி. கல்லூரி அணி, இரண்டாம் இடம் பிடித்த ஆத்தூா் பாரதியாா் மேல்நிலைப் பள்ளி அணிகளுக்கும், பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


