சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படியும், 2018 ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாவது திருத்தம்) திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை (4)ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் நிறுவனங்கள், உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடிதிருத்தம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவோா், சேலம் மாநகராட்சியிலிருந்து உரிய விண்ணப்பங்களைப் பெற்று, உடனடியாக மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
30 நாள்களுக்குள் விண்ணப்பித்து உரிமம் பெறாத நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாகக் கருதி, நிலைய உரிமையாளரும், நடத்துவோரும் பொறுப்பானவா்களாகக் கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுவதோடு சட்டப் பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

