மேட்டூரில் அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கோரி சி.ஐ.டி.யு. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுத் தொகுப்பு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மற்ற முறைசார தொழிலாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கைத்தறி, விசைத்தறி தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், தையல் தொழிலாளா்கள் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட 18 வகையான முறைசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு. சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருப்பண்ணன் தலைமை வகித்தாா். தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா். ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

