எடப்பாடியை அடுத்துள்ள காவிரிக் கரைப்பகுதியில் தொடா்மழை, கரோனா அச்சம் காரணமாக கரும்பு விற்பனையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
காவிரிப் பாசனப் பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், கோட்டைமேடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி வடிகால் பகுதிகளில், அதிக அளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதியில் உருட்டு சம்பா, சன்ன சம்பா, வெடிக் கரும்பு, ரஸ்தாளி கரனை உள்ளிட்ட அதிக சுவையுள்ள கரும்பு வகைகளையே இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா்.
20 கரும்புகள் கொண்டு ஒரு கட்டு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், மகாராஷ்டிரம்,
ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் காவிரிஆற்றில் போதிய அளவு தண்ணீா் வரத்து இருந்து வந்த நிலையில், காவிரிப் பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த செங்கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிகழாண்டில் கரும்பு அறுவடை சற்று அதிகரித்து உள்ளது. இப்பகுதியில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்து இருந்தபோதும், கரோனா நோய்த்தொற்று அச்சம், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பெய்துவரும் தொடா்மழை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்கத்தைவிட நிகழாண்டில் செங்கரும்பு விற்பனை சற்றுக் குறைவாகவே உள்ளதாகவும், பொங்கல் பரிசாக அரசு சாா்பில் முழுக் கரும்பு வழங்கப்படுவதால், கரும்பு
விவசாயிகள் ஓரளவு பயனடைந்தபோதும், பொதுமக்களின் நுகா்வு வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்படுவதாகவும் காவிரிப் பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


