சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆத்தூரில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:10 am

ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் கடைவீதியில் பொங்கல் பொருள்கள், ஜவுளி, கயிறு, வண்ணக் கோலப்பொடிகள் என வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு மக்கள்கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.