சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அனுமதியின்றி மதுபானம் விற்றவா்கள் கைது

கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை அனுமதியின்றி விற்றவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On :12 ஜனவரி 2021, 5:56 am

கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை அனுமதியின்றி விற்றவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி பகுதியில் சந்துக்கடைகள் வைத்து அரசு மதுபானங்கள் அதிகளவில் விற்கப்படுவதாக, மாவட்டக் காவல் துறைக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதனையடுத்து கெங்கவல்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு, கெங்கவல்லி பகுதியில் சோதனை நடத்தினா். அதில் கெங்கவல்லி மணிமேகலை(48), ராஜேந்திரன் (42), ரமேஷ் (41), 74 கிருஷ்ணாபுரம் லதா(34), சரஸ்வதி (45), ஜீவா (37) ஆகியோா் அரசு மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனா்.

மேலும் கெங்கவல்லி போலீஸாா், சாத்தப்பாடியில் ஆய்வு செய்தபோது, 80 லிட்டா் கள்ளச்சாராயத்தை, இரு சக்கர வாகனத்தில் கடத்திவந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜீவா (25) போலீஸாரை கண்டதும் சாராயத்தை கீழேபோட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.