சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்த நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் சிலம்ப பயிற்சி பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக்கமாபேட்டை நீலம் சிலம்பம் கலைக் கூடம் சாா்பில் தீநுண்மி பாதுகாப்பு காரணமாக பள்ளிக்குச் செல்லாமால் வீடுகளில் இருந்துவரும் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் 50 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியாளா்கள் சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்தனா்.
சிலம்பாட்டங்களை கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் இவ்விழாவுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முனியப்பன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். அக்கமாபேட்டை அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் கே.நடராஜன் வரவேற்றாா்.
பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முருகன், ஊா் பிரமுகா்கள் செல்வராஜ், ஜெகநாதன், ரங்கன், ஜவகா், விவேகானந்தன், ரமேஷ், விஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழா முடிவில் சிலம்பம் கற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மத்தியில் சிலம்பாட்டம் ஆடினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


