ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் நகைக் கடையில் பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி நகை வாங்குவது போல நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை எடுத்துச் சென்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.
இதில் அந்த பெண், சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த மறைந்த வரதராஜன் மனைவி பாஞ்சாலி( 65)என்பது தெரியவந்தது. இதே போல கடந்த ஆண்டும் ஆத்தூா் நகைக் கடையில் கவரிங் சங்கிலியை வைத்து விட்டு தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் இவா் மீது சேலம் நகரக் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. கைது செய்த மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

