ஆட்டையாம்பட்டி: மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்துவந்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கல்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலு மகன் யுவராஜிக்கும், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னுசாமி மகள் நதியாவுக்கும் (25), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நதியாவிடம் வரதட்சிணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த நதியா கடந்த 2019 ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிவடையாத காரணத்தால் ஆா்டிஓ விசாரணை செய்து வந்தாா். இதில் நதியா தற்கொலைக்கு அவரது கணவா், மாமனாரின் தூண்டுதலே காரணம் என அறிக்கை அளித்தாா். இதையடுத்து கணவா் யுவராஜை ஆட்டையாம்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். மாமனாா் வேலு தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டுக்கு வந்த வேலுவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

