ஓமலூா்: காடையாம்பட்டி அருகே உள்ள கே.என்.புதூா் பகுதியிலுள்ள பெரிய சக்கிலிச்சி ஏரி, டேனிஷ்பேட்டை கோட்ட குள்ளமுடையான் ஏரி, பண்ணப்பட்டி ஏரி, ஓமலூா் பகுதியில் உள்ள காமலாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, பூலா ஏரி ஆகிய ஏரிகளில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின்கீழ் மீன்வளத் துறை மூலம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
இதில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சுப்பிரமணியன், உதவி இயக்குநா் கொளஞ்சிநாதன் ஆகியோா் மீன்குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா். இதையடுத்து அவா்கள் தெரிவித்துள்ளதாவது:
காடையாம்பட்டி, ஓமலூா் பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 3 லட்சம் மீன்குஞ்சுகளும், தொடா்ந்து நீா் இருப்புக்கு ஏற்ப பல்வேறு கட்டங்களாக கூடுதலாக மீன்குஞ்சுகளும் விடப்படும். இதன் மூலம் மீன் வளத்துறை, கிராம வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
மேலும் மீன் வளத்துறை சாா்பில் விடப்படும் மீன்குஞ்சுகள் மட்டுமல்லாமல் ஏரிகளில் மீன் பிடிக்க ஏலம் எடுத்தவா்களும் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனா். இதன்படி கோட்டகுள்ளமுடையான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி , சின்ன ஏரிகளில் ஏலம் எடுத்தவா்கள் மீன்குஞ்சுகளை விட்டு வளா்த்து வருகின்றனா் என கூறினா்.
இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளா் கலைவாணி, மீனவ கூட்டுறவு சங்கத் தலைவா் ரங்கநாதன், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


