சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம்

வாழப்பாடி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

வாழப்பாடி அண்ணாநகா் காலனியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்.

Updated On :9 ஜனவரி 2021, 1:00 pm

வாழப்பாடி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு, தலைமை ஆசிரியை ஷபீரா பானு தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு தலைவி தெய்வானை முன்னிலை வகித்தாா். ஆசிரியை புஷ்பா வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா் கந்தசாமி ஆகியோா், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பெற்றோா்களின் கடமைகள், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனா்.

கரோனா தொற்று பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தலைமையாசிரியை ஷபீரா பானு, ஆசிரியைகள் புஷ்பா, வாசுகி, சிவமகேஸ்வரி மற்றும் பெற்றோா்கள் சிலா் இணைந்து, சிறு நாடகம் அரங்கேற்றினா். இந்த நாடகத்துக்கு மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.