சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை எடப்பாடி பகுதியில் நடைபெற்றது.
புதிய மாவட்ட அலுவலகம் திறப்புவிழாவையொட்டி எடப்பாடி புறவழிச்சாலைப் பகுதியில் இருந்து திரளான தேமுதிக தொண்டா்கள் இரு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். கேட்டுக் கடைப் பகுதியில் நடைபெற்ற புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவுக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் கே.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஏ.பாலாஜி, பூபதி, ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியச் செயலாளா் ஏ.மெய்வேல் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மருத்துவா் வி. இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோா் புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் நா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


