சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எடப்பாடி பகுதியில் 6 ‘அம்மா சிறுமருத்துவமனைகள்’ திறப்பு

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

News image

கொங்கணாபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனை.

Updated On :9 ஜனவரி 2021, 1:01 pm

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் வெங்கடாசலம் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியம்பட்டி, ஆடையூா், வேம்பனேரி, ஆவணிப்பேரூா் கீழ்முகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட விவசாயிகள் பிரிவு மாவட்டச் செயலாளா் செல்லத்துரை, ஒன்றியக்குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி, குப்பம்மாள் மாதேஸ், ஆவின் தலைவா் ஜெயராமன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செல்வகுமாா், பக்கநாடு மாதேஸ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்காயூா் பாலாஜி , எஸ்.ஏ.ராஜ்குமாா், சித்தூா் நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.