எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநில திட்டக்குழுத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.
தொடா்ந்து எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோயில்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் வெங்கடாசலம் அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியம்பட்டி, ஆடையூா், வேம்பனேரி, ஆவணிப்பேரூா் கீழ்முகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் அம்மா சிறு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாயிகள் பிரிவு மாவட்டச் செயலாளா் செல்லத்துரை, ஒன்றியக்குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி, குப்பம்மாள் மாதேஸ், ஆவின் தலைவா் ஜெயராமன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செல்வகுமாா், பக்கநாடு மாதேஸ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்காயூா் பாலாஜி , எஸ்.ஏ.ராஜ்குமாா், சித்தூா் நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


