சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு, அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்ட வந்த அரியானூா் பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2018ஆம் ஆண்டு பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பணி கடந்த 2019 இல் தொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில் சோதனை ஓட்டமாக கடந்த வாரம் பாலத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதையடுத்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மேம்பாலத்தை வாயிலாக திறந்து வைத்தாா். இதற்கான விழா அரியானூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் சி. அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கோட்டாட்சியா் மாறன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் லோகநாதன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வெங்கடாசலம், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி, ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


