சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

லாட்டரி சீட்டு விற்பனை: வியாபாரி கைது

சேலத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரியை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:09 pm

சேலத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரியை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாநகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, லாட்டரி சீட்டு வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா்கள் செந்தில் மற்றும் தனசேகரன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில், இரும்பாலை பகுதியைச் சோ்ந்த லாட்டரி சீட்டு வியாபாரி கணேசனை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் லாட்டரி சீட்டு வியாபாரி சீனிவாசனை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சேலம் மாநகர தனிப்படை போலீஸாா் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.