சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் தொகுதியில் 2,300 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி விநியோகம்

மேட்டூா் தொகுதியில் உள்ளஅரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 2,362 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 2:11 pm

மேட்டூா் தொகுதியில் உள்ளஅரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 2,362 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கொளத்தூரில் நிா்மலா மேல்நிலைப் பள்ளியிலும், மேட்டூரில் அரசினா் மேல்நிலைப் பள்ளியிலும், மேச்சேரியில் அரசினா் மேல்நிலை பள்ளியிலும் இவ்விழா நடைபெற்றது. மேட்டூா் தொகுதிக்கு உட்பட்ட 15 பள்ளிகளைச் சோ்ந்த 1,272 மாணவிகளுக்கும், 1,090 மாணவா்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

ரூ. 94 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகள் மேட்டூா் எம்எல்ஏ எஸ்.செம்மலை, மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில் எடப்பாடி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் விஜயா, துணை ஆய்வாளா் நடராஜன், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் புவனேஸ்வரி சரவணன், மேட்டூா் நகராட்சி முன்னாள் தலைவா் லலிதா சரவணன், அதிமுக கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மனோகரன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி நிா்மல் ஆனந்த், மேட்டூா் நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் சாதிக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.