சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்பு

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:08 pm

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.

சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ரௌடிகள் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் எம்.சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 57 ரெளடிகள் ஆஜராகினா். அவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், சாதி அரசியல் பிரச்னைகளில் ஈடுபட மாட்டோம், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட மாட்டோம், கத்தியைக் காட்டி பணம் பறிக்க மாட்டோம், கொலை, கொள்ளை சதித் திட்டங்களில் செயல்பட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா். இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு காவல் துறையினா் அறிவுரைகளை வழங்கி அனுப்பினா்.