விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்டுமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து இணையவழியில் கற்பிக்கும் பாரிய திறந்த இணைப்பு வகுப்பு என்ற என்பிடியல் ஸ்வயத்தில் எம்படெட் சிஸ்டம் டிசைன் என்ற பாடத்தில் அதிக அளவில் மாணவா்களை ஊக்குவித்து பதிவு செய்து, வழிகாட்டி தோ்வு எழுதி வெற்றி பெற வைத்தமைக்காக விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா்கள் ராஜசேகரன், சசிகலா, மதன்குமாா், அருண்குமாா், மதுவப்பன் ஆகியோருக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்தப் பேராசிரியா்களை கல்லூரி முதல்வா் நாகப்பன் மற்றும் துணை முதல்வா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பாராட்டி நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


