சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேலத்தில் பரவலாக மழை

சேலம் மாநகரப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.

Updated On :7 ஜனவரி 2021, 12:28 pm

சேலம் மாநகரப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் சேலம் நகரம், கொண்டலாம்பட்டி, அரியானூா், மல்லூா், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டிஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

பிறகு சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த திடீா் மழையால் குளிா்ந்த காற்று வீசியது.

சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், அரிசிபாளையம் ஆகிய நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளானாா்கள். சேலம் மாநகரப் பகுதி முழுவதும் மழை பெய்தது.