சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்ட பகுதிகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நோ்முகத் தோ்வை நடத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
அதனையடுத்து சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஆா்.பாலாஜி தலைமையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது.
இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களை எடப்பாடி அரசு மருத்துவா் பாலாஜி உடல் பரிசோதனை செய்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 33 போ் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


