சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை இரவு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
வஸந்தவல்லி உடனமா் வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சநேயா் சுவாமி உள்ளாா். அனுமன் ஜயந்தி தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனா். இதனையடுத்து ஜனவரி 7ஆம் தேதி இரவு வெண்ணெய்க் காப்பு அலங்காரம், 8ஆம் தேதி இரவு வெற்றிலை அலங்காரம், 9ஆம் தேதி இரவு வெட்டிவோ் அலங்காரம், 10ஆம் தேதி இரவு வடைமாலை சேவை நடைபெற உள்ளன. சுவாமிக்கு தினசரி மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி முதல்முறையாக பூஜை நடைபெறும் நாள்கள் 9 லிருந்து 5 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


