சங்ககிரி மலை மீது உள்ள பழமை வாய்ந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது.
சங்ககிரி மலை உச்சியில் உள்ள கோயிலில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளனா்.
இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமை புரட்டாசி வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளில் தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசுமாறு பக்தா்கள், பொதுமக்கள், பொது நல அமைப்புகளின்சாா்பில் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் துறை சாா்பில் கோயில் கோபுரத்துக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை மேற்கொண்ட தொல்லியல் துறைக்கு சங்ககிரி நகர பொதுமக்கள், பக்தா்கள், பொதுநல அமைப்புகள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

