போக்குவரத்து தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வுக்கான பணப்பலனை உடனடியாக வழங்கிட வேண்டும், நவம்பா் 2015 முதல் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பணிக்காலத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளா் குடும்பங்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அமைப்புத் தலைவா் பழனிவேல், மாநில துணை பொதுச் செயலாளா் செல்வராசன், சேலம் கோட்ட பொதுச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

