வரும் கல்வியாண்டு நிறைவடைவதற்குள் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன் தெரிவித்தாா்.
சேலம், நாமக்கல் உள்பட 5 மாவட்டங்களுக்கு மைய மருத்துவமனையாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, மருத்துவமனை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன் கூறியதாவது:
வரும் கல்வியாண்டு நிறைவடைவதற்குள் சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படும். சென்னை, மதுரையை அடுத்து மூன்றாவதாக சேலம் அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது குறிப்பிடத்தக்கது.
கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அறுவைச் சிகிச்சை அரங்கங்களும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

