சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

Updated On :5 ஜனவரி 2021, 5:35 am

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனைவி அனுசுயா, மகன் சபரிவாசன் ஆகியோருடன் வந்தாா். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். உடனே போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

பின்னா் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.இதில், தான் வேலை கேட்டு ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அவா் இறந்துவிட்டதால் பணம் கொடுத்தவா்கள் தனக்கு தொந்தரவு அளித்து வருகின்றனா். எனவே, பணத்தை மீட்டு தர வேண்டும் எனத் தெரிவித்தாா்.