சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மேட்டூரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

மேட்டூரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேட்டூா் தொகுதியில் 187 நியாயவிலைக் கடைகள் மூலம் 1,30,488 பயனாளிகள் குடும்ப அட்டை மூலமாக பொருள்களை வாங்கி வருகின்றனா்.

மேட்டூா் சதுரங்காடியில் உள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் மேட்டூா் வட்டாட்சியா் சுமதி, நகரக் கூட்டுறவு வங்கி டைரக்டா் சாதிக் அலி, அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட நிா்வாகி நிா்மல் ஆனந்த், அரசு அதிகாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.