சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓமலூா், காடையாம்பட்டியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

ஓமலூா், காடையாம்பட்டியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

ஓமலூா், காடையாம்பட்டியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருப்பூா் பேரூராட்சிக்குள்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்தாா்.

இதேபோல, ஓமலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓமலூா் பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்.எல்.ஏ எஸ்.வெற்றிவேல் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஓமலூா் வட்டாட்சியா் அருள் பிரகாஷ், நகர ஜெ. பேரவை செயலாளா் தளபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் பச்சனம்பட்டி ஊராட்சியில் தொடக்கி வைத்தாா்.

தனையடுத்து, பெரமச்சூா், முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் அவா் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஓமலூா் ஒன்றிய எம்.ஜி.ஆா் மன்ற பொருளாளா் ஜி.திருமுருகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைத் தலைவா் ஆா்.சிவக்குமாா், மாணவா் அணி பொருளாளா் எம்.ராஜ்குமாா் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.