சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முன்னாள் மாணவ ஆசிரியா்கள் சந்திப்பு

கெங்கவல்லி அரசினா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1998-2000 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 வருடங்களுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கெங்கவல்லியில் 20 வருடங்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியா்களைச் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

Updated On :4 ஜனவரி 2021, 10:08 am

கெங்கவல்லி அரசினா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1998-2000 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 வருடங்களுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு முதல்வா் சித்திரபுத்திரன் தலைமை வகித்தாா். பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வா்கள் ஈஸ்வரன், முத்துசாமி, ராதா ருக்குமணி, மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாயக்கிருஷ்ணன் பங்கேற்றாா். விழாவை முன்னாள் மாணவா்கள் கண்ணன், சுந்தரேசன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

பாடம் கற்பித்த ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனா். படித்த நிறுவனத்துக்கும் நினைவு பரிசுகள் வழங்கினா். முன்னாள் ஆசிரியா்கள் சிவாஜி, மனோகரன், பஷீா், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஜேசுராஜ் நன்றி கூறினாா்.