சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 10:02 am

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 105.07 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,045 கன அடியிலிருந்து 1,083 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து நொடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 71.56 டி.எம்.சி.யாக உள்ளது.