ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்சசிக்கு கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
இதேபோன்று ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தளபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் ஓமலூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தொகுப்பு வழங்கும் பணியினை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.எஸ்.கே.ஆர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பச்சனம்பட்டி பெரமச்சர் முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் சரவணன் ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் திருமுருகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைத்தலைவர் சிவகுமார் அதிமுக மாணவர் அணி பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


