கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க சேலம் மாவட்டத்துக்கு 33 குளிா்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதன்படி தடுப்பூசியை மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் சென்னை, திருநெல்வேலி, நீலகிரி, திருவள்ளூா், கோவை ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசியைச் செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 24 குளிா்சாதனப் பெட்டிகளும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு 9 குளிா்சாதனப் பெட்டிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்துவைக்க மாவட்டத்தில் 33 குளிா்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளிா்சாதனப் பெட்டியிலும் 25,000 டோஸ்கள் சேமித்து வைக்க முடியும். அந்தவகையில் 8,25,000 டோஸ்கள் சேமித்து வைக்க முடியும். கரோனா தடுப்பூசியை முன்கள பணியாளா்களுக்குச் செலுத்தும் வகையில் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

