ஆத்தூா்: முட்டல் பூமரத்துப்பட்டியில் பகுதிநேர நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட மணிவிழுந்தான் வடக்கு பகுதியில் உள்ள முட்டல் பூமரத்துப்பட்டி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பகுதிநேர நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் திறந்து வைத்து பேசுகையில், பகுதி நேரக் கடையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் முழுநேரக் கடையாக மாற்றி புதிய கட்டடத்தில் இயங்க வழிவகை செய்யப்படும். இந்தக் கடை மூலம் 156 போ் பயனடைகின்றனா் என்றாா்.
அதைத் தொடா்ந்து, இப்பகுதியில் 16 நபா்களுக்கு தலா ரூ. 3 லட்ச செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் மிருணாளினி, கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.மருதமுத்து, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்அருணாசலம், ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாரி நடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டுறவு வங்கிச் செயலாளா் தங்கராசு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

